/* */

பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து  10 பவுன் நகை திருட்டு
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே தளரபாடி கிராமதை சேர்ந்தவர் சுதாகர் (வயது 36), விவசாயி. இவருடைய மனைவி தங்கம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இன்று சுதாகர் உரம் வாங்குவதற்காக பெரணமல்லூருக்கு சென்றுவிட்டார். மகன், மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மனைவி தங்கம் வீட்டை பூட்டிக்கொண்டு 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் சுதாகர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 10 பவுன் நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

இதுகுறித்து அவர் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 25 Feb 2022 1:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்