/* */

நகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் முற்றுகை போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் பாஜக வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் முற்றுகை போராட்டம்
X

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் பாஜக வினர் முற்றுகை போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சாசா வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் முத்துசாமி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

மார்கழி மாதம் பக்தர்கள் எழுந்து கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக நகராட்சி சங்கு ஒலிக்கச்செய்ய வேண்டும், வந்தவாசி பஜாரில் குண்டும் குழியுமாக உள்ள பிரதான சாலையை சீரமைக்க வேண்டும், மயான பாதைகளை புனரமைக்க வேண்டும்.

தெருக்களில் பொதுமக்களுக்கும், வியபாரிகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ள மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்,

புதிய பஸ்நிலையத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணையர் பிரீத்தி, அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 21 Dec 2021 1:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்