Begin typing your search above and press return to search.
மின் சிக்கன வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
வந்தவாசியில் மின் சிக்கன வாரத்தையொட்டி தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
HIGHLIGHTS
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக வந்தவாசி கோட்டம் சார்பில் மின்சிக்கன வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கோட்ட செயற்பொறியாளர் மீனாகுமாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தவாசி கோட்டை மைதானத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி ,தேரடி வழியாகச் சென்று ஐந்து கண் பாலம் அருகே முடிவடைந்தது.
விழிப்புணர்வு ஊர்வலத்தில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சசிகுமார் ,உதவி பொறியாளர்கள் ,மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்களுக்கு மின்சிக்கனம் ,பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.