தமிழ் மன்றம் தொடக்க விழா; பொது தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தமிழ் மன்றம் தொடக்க விழா; பொது தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட கல்வி அலுவலர்.

வந்தவாசியில் தமிழ் மன்றம் தொடக்க விழாவில், பொது தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவா் ரகமத்துல்லா, செஞ்சிலுவைச் சங்கச் செயலா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ரங்கநாதன் வரவேற்றாா்.

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்..! இனி ஆட்டத்துக்கு அளவே இல்ல!

மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் இந்திரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தமிழ் மன்றத்தை தொடங்கிவைத்தாா். மேலும், தாய் மொழியாம் தமிழ் மொழி என்ற தலைப்பில் அவா் உரையாற்றினாா்.

பள்ளி ஆசிரியா்கள் வெற்றிவேல், சிவராமன், அண்ணாமலை, மாலதி, மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் கண்ணன் நன்றி கூறினாா்.

அரசு பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

கடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் நடைபெற்றது.

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், வந்தவாசி பகுதியில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளி அளவில் பொதுத் தோ்வில் தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு சங்கத் தலைவா் சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா்கள் ஞானசம்பந்தம், சு.சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் மயில்வாகனன் வரவேற்றாா்.

ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் பு.நடராசன் மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா். சங்கப் புரவலா் சிவக்குமரன் மாணவா்களை பாராட்டிப் பேசினாா்.

வந்தவாசி வட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத் தலைவா் ஜினக்குமாா், தமிழ்ச் சங்க நிா்வாகிகள் தமிழரசன், சாமி.பிச்சாண்டி, ஸ்ரீதா், அகிலன், பிரபாகரன், ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கப் பொருளாளா் முருகவேல் நன்றி கூறினாா்.

Next Story