/* */

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட நகைக்கடை, செல்போன் கடைக்கு சீல்

வந்தவாசியில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டத்துடன் வியாபாரம் செய்த நகைக்கடை, செல்போன் கடைக்கு சீல்

HIGHLIGHTS

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட நகைக்கடை, செல்போன் கடைக்கு சீல்
X

அதிக மக்கள் கூட்டத்துடன் வியாபாரம் செய்த ஒரு செல்போன் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மீறி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஒருசில கடைகளில், அதன் உரிமையாளர்கள் அதிக மக்கள் கூட்டத்துடன் வியாபாரம் செய்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடைகள், வணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட நகைக்கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். அதேபோல் அதிக மக்கள் கூட்டத்துடன் வியாபாரம் செய்த ஒரு செல்போன் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஆய்வின்போது நகராட்சி அலுவலர் சிவா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், மேற்பார்வையாளர் லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 9 Aug 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?