/* */

வந்தவாசியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது

வந்தவாசியில் ரூ.2½ லட்சம் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வந்தவாசியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பைக்கில் வந்தவர் சென்னாவரம் கிராமம் விஜயலட்சுமி நகரைச்சேர்ந்த மணிகண்டபிரபு (வயது 34), வியாபாரி என்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் மணிகண்டபிரபுவின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் 6 மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து போதை பொருட்களையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டபிரபுவை கைது செய்தனர்.

Updated On: 28 Aug 2022 1:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க