/* */

வந்தவாசியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது

வந்தவாசியில் ரூ.2½ லட்சம் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வந்தவாசியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பைக்கில் வந்தவர் சென்னாவரம் கிராமம் விஜயலட்சுமி நகரைச்சேர்ந்த மணிகண்டபிரபு (வயது 34), வியாபாரி என்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் மணிகண்டபிரபுவின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் 6 மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து போதை பொருட்களையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டபிரபுவை கைது செய்தனர்.

Updated On: 28 Aug 2022 1:25 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?