திருவண்ணாமலை மாவட்டத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வந்த நிலையில், இன்று பரவல் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மாவட்டத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் புதிதாக 231 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 107 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்ட அளவில், 1950 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai chatbots for business