/* */

திருவண்ணாமலை தீப திருவிழாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை: ஆட்சியர் அறிவிப்பு

தீப திருவிழாவில், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை தீப திருவிழாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை: ஆட்சியர் அறிவிப்பு
X

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ்.

திருவண்ணாமலை: தீப திருவிழாவில், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தீப திருவிழாவின்போது, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் விதிமுறைகளை, வணிகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். உணவு பொருட்களில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் விற்கக் கூடாது. டீ கடைகளில் தரமான டீ மற்றும் காபி தூளை பயன்படுத்த வேண்டும். உணவு பொருட்களில் செயற்கை வண்ணம் சேர்க்கக்கூடாது.

உணவு பாதுகாப்பு துறை பதிவுச்சான்று, உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். உணவு சமைக்குமிடம், சுத்தமாக, சுகாதாரமானதாக பராமரிக்க வேண்டும். தூய்மையான குடிநீர் பயன்படுத்த வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குடிநீர் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. நிக்கல் பூசிய செம்பு பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. உணவு பண்டங்களை அச்சடித்த தாள்களில் வைத்து வினியோகிக்கக்கூடாது. பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Nov 2021 6:46 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  5. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  6. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  7. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  8. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  9. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  10. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!