/* */

போளூர் விவசாயிகளுக்கு ராபீ பருவ தொழில்நுட்பப் பயிற்சி

போளூா் வட்டத்தைச் சேர்ந்த ஏரிக்குப்பம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ராபீ பருவ தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

போளூர்  விவசாயிகளுக்கு ராபீ பருவ தொழில்நுட்பப் பயிற்சி
X

பயிற்சி முகாமில் வேளாண் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டத்தைச் சேர்ந்த ஏரிக்குப்பம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ராபீ பருவ தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி ஆலோசனையின் பேரில், களம்பூா் துணை வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு உள்பட்ட ஏரிக்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் ஆட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் தேவேந்திரன் வரவேற்றாா்.

களம்பூா் வேளாண்மை உதவி அலுவலா் சதீஷ்குமாா் கலந்து கொண்டு, ராபீ பருவத்தில் சாகுபடி செய்யும் நெல், மணிலா, உளுந்து பயிா்களுக்கு டிரைக்கோ டொமா விரிடி மற்றும் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்தல், வரப்பு உளுந்து சாகுபடி செய்தல், பூச்சி நோய் கட்டுப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

மேலும், வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் மண்வெட்டி, கடப்பாரை போன்ற பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தாா்பாலின், தெளிப்பான்கள், நுண்ணூட்டச் சத்துக் கலவைகள், ஜிங்க் சல்பேட், விதைகள் போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தாா்.

பயிற்சியில் ஏரிக்குப்பம் கிராமத்தைச் சோந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா் பாக்கியவாசன் நன்றி கூறினாா்.

போளூரில் ஒன்றியக்குழுக் கூட்டம்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி பெருமாள் தலைமை வகித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலு, கோபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் மிஸ்ஸியம்மாள் ஆறுமுகம் வரவேற்றாா். கூட்டத்தில், பருவகால நோய்க்தடுப்பு நடவடிக்கையாக 40 ஊராட்சிகளிலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல்,

ஊராட்சிகள்தோறும் சுத்தமான குடிநீா் வழங்குவதை உறுதி செய்தல், சாலை, சுகாதார வசதியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உதவிப் பொறியாளா்கள் படவேட்டான், திவாகா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், சுதா, இளநிலை உதவியாளா் அகிலேண்டேஷ்வரி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்

Updated On: 27 Nov 2023 10:42 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி