/* */

திருவண்ணாமலை: பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

Speech Competition - திருவண்ணாமலையில் நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பரிசு வழங்கினார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
X

மாவட்ட ஆட்சியருடன் பரிசு பெற்ற மாணவிகள்.

Speech Competition - தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி திவ்யாஸ்ரீ முதல் பரிசும், மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி ஹேமலதா 2-வது பரிசும், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி சந்திரமதி 3-வது பரிசும் பெற்றனர். மேலும் கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி வைஷ்மதி, திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி சிவகாமி ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் சோமாசிபாடி அல் அமீன் கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவி மீனாட்சி முதல் பரிசும், திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவி திரிஷா 2-வது பரிசும், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவி நர்மதா 3-வது பரிசும் பெற்றனர். கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் தென்னாங்கூர் அரசு கலை கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவி நிர்மலா முதல் பரிசும், தென்மாத்தூர் கம்பன் கலை கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவி பவானி 2-வது பரிசும், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவி நர்மதா 3-வது பரிசும் பெற்றனர்.

பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசு மற்றும் சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜெயஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Jun 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!