திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபானங்கள் கொள்ளை

கொள்ளை நடைபெற்ற டாஸ்மாக் கடையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்துபல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அடுத்த கருந்துவாம்பாடி கூட்ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் தினந்தோறும் லட்சக்கணக்கில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அங்கு பணியாற்றும் ஊழியர்கள் நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம் போல் 10 மணியளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று உள்ளனர்.
காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டர் (இரும்பு கதவு) மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடையின் ஷட்டரை ஆயுதங்களால் வளைத்த கொள்ளையர்கள் உள்ளே சென்று சில மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது..
மேலும் அவர்கள் கடையின் உள்ளே இருந்த லாக்கரை உடைக்க முயன்றதாக தெரிகிறது. அதன் உறுதித்தன்மையால் கொள்ளையர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் கடையின் உள்ளே இருந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மது விற்பனை பணம் சுமார் ரூ.7 லட்சம் தப்பியது.
கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பக்கத்து கடையில் இருந்த 10 அரிசி மூட்டைகளை தூக்கி சென்று விட்டனர். அந்த பகுதியில் மேலும் 2 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu