/* */

தொழில் முனைவோருக்கு சிறப்பு மானிய திட்டம்

பழங்குடியின தொழில் முனைவோருக்கு சிறப்பு மானிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தொழில் முனைவோருக்கு சிறப்பு மானிய திட்டம்
X

பைல் படம்

பழங்குடியின தொழில் முனைவோருக்கு சிறப்பு மானிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள தகவல்: அண்ணல் அம்பேத்கர் 'பிசினஸ் சாம்பியன்ஸ்' திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கிக் கடனாகவும் 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம்.

அதிகபட்சமாக ரூ 1.50 கோடி வரை மானியமாக பெறலாம். வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் தொடங்க விரும்புவோரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற கல்வித் தகுதி இல்லை. 55 வயதுக்குட்பட்டோர், உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் தொடங்கலாம். வாகனங்களை முதன்மையாக கொண்டு செயல்படக்கூடிய தொழில் மற்றும் உற்பத்தித் தொழில்கள் தொடங்குவோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். சுய முதலீட்டில் தொழில் துவங்கினாலும் இத்திட்டம் மூலம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையம் பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம்

Updated On: 25 May 2023 2:44 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்