/* */

சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம்; பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Sathanur Dam Today News-சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால், பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம்; பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

சாத்தனூர் அணை

Sathanur Dam Today News- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 10 நாட்களாக, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக செங்கத்தில் 15.80 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஜமுனா மரதூரில் 10 தண்டராம்பட்டில் 9.20 , கலசப்பாக்கத்தில் 5 மில்லி மீட்டர் மழை பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகில் சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது அணையில் 116.60 அடி உயரத்திற்கு அதாவது, 6,788 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.72 சதவீதமாகும்.

சாத்தனூர் அணை, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் இடது மற்றும் வலதுபுற கால்வாயிலும் நீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கி கல்வராயன் மலைத்தொடர் பகுதியிலும், கிருஷ்ணகிரி அணையின் உபரிநீரும் சேர்ந்து சாத்தனூர் அணைக்கு வரும் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி, வினாடிக்கு 3,760 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இது ஒரே நாளில் நான்கு மடங்காக உயர்ந்து தற்போது வினாடிக்கு 12,345 கன அடி நீராக வந்து கொண்டிருக்கிறது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 9,930 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதில் 450 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. எனவே, சாத்தனூர் அணையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக கடலூரை சென்றடையும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வாழும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், யாரும் ஆற்றில் இறங்கவோ, போனில் 'செல்பி' எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேறும் போது, அணையிலும் அணையை ஒட்டி உள்ள கரையோர பகுதிகளில் இருக்கும் முதலைகள் அடித்து வரப்பட்டு ஆற்று நீரில் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 16 Feb 2024 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...