Begin typing your search above and press return to search.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி திருவண்ணாமலையில் ரயில் மறியல் போராட்டம்
வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திருவண்ணாமலையில் திமுக கூட்டணி கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம்
HIGHLIGHTS
புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் மத்திய அரசை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் ரயில் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டபோது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்பு பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும், கேஸ், விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல், பொதுத்துறைகளை, தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதைக் கண்டித்தும், களான எல்.பி.எப்., ஐஎன்டியூசி, ஹெச்.எம்.எஸ். சிஜடியூ, ஏஐடியூசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில் தொழிலாளர்கள், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.