/* */

மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் வாகனம் வரும் 8 ஆம் தேதி பொது ஏலம்: காவல்துறை அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 8 ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது

HIGHLIGHTS

மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் வாகனம் வரும் 8 ஆம் தேதி பொது ஏலம்: காவல்துறை அறிவிப்பு
X

பைல்படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு பறிமுதல் வாகனங்கள் வரும் 8ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசாரால் சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 8ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட 126 வாகனங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவின்படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.

இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நுழைவு கட்டணமாக ரூ. 100, முன்பணமாக ரூ. 1000 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ரசீது பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். ரசீதுகளை இன்று மாலை 5 மணி வரை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

வாகனம் ஏலம் எடுக்காதவர்களுக்கு முன்பணம் மட்டுமே திருப்பி தரப்படும். வாகனம் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன், 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். வாகனம் ஏலம் எடுத்ததற்கான ரசீது, அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும். மேலும் இது குறித்து தகவல்களை மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 01475 233920 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று எஸ்பி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 7 March 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு