திருவண்ணாமலை பகுதியில் நாளை, நாளை மறுநாள் மின் நிறுத்தம்

திருவண்ணாமலை பகுதியில் நாளை, நாளை மறுநாள் மின் நிறுத்தம்
X
திருவண்ணாமலை பகுதியில் மின் பாதை பராமரிப்பு பணிக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை துணை மின் நிலையம் மின்பாதை பராமரிப்பு பணிக்காக நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்;

செட்டிகுளம் மேடு, தந்தை பெரியார் நகர், மாந்தோப்பு, பே கோபுர தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு ,வ உ சி நகர், ராஜராஜன் தெரு, பெரும்பாக்கம் ரோடு, ரமணாஸ்ரம பகுதிகள், செங்கம் ரோடு ,இடுக்கு பிள்ளையார் கோவில் தெரு ,காஞ்சி மெயின் ரோடு, கோசாலை, அடி அண்ணாமலை , ஊசாம் பாடி, நல்லவன் பாளையம் புறவழிச் சாலை, சொர்ண பூமி நகர், ராதாபுரம் ,கிருஷ்ணாபுரம், உடையார் குப்பம், அந்தோணி நகர், புதூர் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் புதன்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்;

ஐயங்குளத்தெரு, கடம்பராயன் தெரு, சின்ன கடை தெரு, தேரடி தெரு, ராமஜெயம் நகர் ,திருவள்ளுவர் நகர், கோபால் தெரு, முகல் புரா தெரு, பாரதிதாசன் நகர் ,அருணகிரிபுரம், துர்க்கை நம்மியந்தல், துரிஞ்சாபுரம், பெரிய கிளாம்பாடி, நல்லவன் பாளையம், சே ஆண்டாப்பட்டு, சைதாப்பேட்டை, ரெட்டியார் பாளையம், இருளர் குடிசை பகுதிகள் , வேல் நகர், தாளகிரி ஐயர் தெரு, அஜீஸ் காலனி, திருவள்ளுவர் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் புதன் கிழமை காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துணை மின் நிலைய மின்பாதை பராமரிப்பு பணியாள் மூன்று நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் ,அதன் விவரம்;

புதுக் கார்கானா தெரு, ராமலிங்கனார் தெரு ,பழைய கார்கானா தெரு, சன்னதி தெரு, வட மாத்தி தெரு ,தண்டராம்பட்டு ரோடு, அண்ணா நகர் ,கல் நகர், மாரியம்மன் கோவில் தெரு, வானவில் நகர் ,தென்றல் நகர், கணேஷ் நகர், கோகுல் நகர், ஆடையூர், கிழிச்செட்டிபட்டு ,நல்லவன் பாளையம், எஸ் ஆர் ஜி டி எஸ் பள்ளி பகுதி ,தானிப்பாடி, அண்ணா நகர் ,அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்னிருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


Tags

Next Story
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி