/* */

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது

HIGHLIGHTS

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் 5 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தீவிர போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை நமது இந்திய திருநாட்டில் இருந்து அறவே ஒழித்திடும் பொறுத்து கடந்த 28 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடைபெற்று வருகிறது.

29 ஆவது ஆண்டாக இம் முகம் நாளை மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மூலம் நம் நாட்டில் பெருமளவில் போலியோ நோய் தாக்கம் குறைக்கப்பட்டு தற்சமயம் அந்த நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளோம்.

5 வயது குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்னரே போலியோ சொட்டு மருந்து அளித்து இருப்பினும் நாளை ஞாயிற்றுக்கிழமை இலவசமாக சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1992 முகாம்களில் 7103 பணியாளர்கள் மூலமாக இம் முகாம் செயல்பட உள்ளது. இவர்கள் முகாம் நடைபெறும் நாள் அன்று அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள்.இப்பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முகாம்கள் மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதுடன் புகைவண்டி நிலையம், பேருந்து நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் நடமாடும் முகாம் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர தொலைதூரத்தில் உள்ள எளிதில் செல்லக்கூடிய இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ஒரு குழந்தை கூட விடுபடாது, அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, எனவே பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயினை ஒழிப்பதற்கு ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 2 March 2024 1:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்