/* */

அருணை மருத்துவக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம்

அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதால், நடப்பு ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது

HIGHLIGHTS

அருணை மருத்துவக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம்
X

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் கம்பன்

திருவண்ணாமலை ஜீவா கல்வி அறக்கட்டளை மூலம் செயல்படும் வரும் அருணை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ ஆணையம், நேஷனல் மெடிகல் கமிஷன், அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. எனவே நடப்பு கல்வியாண்டில் அருணை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 150 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் கம்பன் தெரிவிக்கையில், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ சேவை வழங்க வேண்டுமென்பது அமைச்சர் எ வ. வேலு வின் விருப்பம்.

அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்கப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு உயர் நிலை வசதிகள் நேரடி ஆய்வு நடத்தப்பட்டு, மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு 150 மாணவர்கள் சேர்க்கை நடைபெற அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மற்றும் சிறுநீரக சுத்திகரிப்பு மையம் உள்ளன. அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தும் வசதியும் உள்ளது. திருவண்ணாமலை போன்ற கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தரமான மருத்துவக் கல்வியை பெறவேண்டும் என்பது அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோக்கமாகும் . என தெரிவித்தார்.

கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் கண்காணிப்பாளர்கள் மருத்துவர் குப்புராஜ், முனைவர் ஆர். சேஷாத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 3 Nov 2021 1:51 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்