/* */

திருவண்ணாமலை தீபத் திருவிழா; தெப்பல் உற்சவம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை தீபத் திருவிழா; தெப்பல் உற்சவம்
X

அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்த  சந்திரசேகரர்


பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம்அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் கொடிமரம் அருகே ஆனந்த நடனம் ஆடினார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணை பிளக்கும் கோஷத்தை எழுப்பினர்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க சிவகொடியை சிவாச்சாரியார்கள் இறக்கினர்.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நிறைவடைந்ததை தொடர்ந்து, 3 நாட்கள் அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, முதல் நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சந்திரசேகரர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ள அய்யங்குளத்தை சுற்றிலும், மின்னொளி மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மேலும், குளத்தை சுற்றிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வீரர்களும், மருத்துவக் குழுவினரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்ல உள்ளனர். மலைமீது மகாதீபம் ஏற்றிய பிறகு, இறைவன் கிரிவலம் செல்வது தனிச்சிறப்பு. அப்போது, பராசக்தி அம்மனும் உடன் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். மேலும், தீபத்திருவிழா 2ம் நாள் தெப்பல் உற்சவமான இன்று இரவு, அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பலில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து, நாளை இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Updated On: 1 Dec 2023 4:53 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  8. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...