/* */

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருட்கள், தங்க நகைகளை மர்ம நபர்களை திருடிச்சென்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
X

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருட்கள், தங்க நகைகளை மர்ம நபர்களை திருடிச்சென்றனர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் அனுராதா (வயது 46), திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 29-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள தனது மகளையும், மருமகனையும் அழைத்துவரச் சென்றிருந்தார். பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு இரவு திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 1½ கிலோ வெள்ளிப்பொருட்கள், 11½ பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அனுராதா திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Nov 2021 12:39 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு