கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

திருவண்ணாமலையில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
X

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:

திருவண்ணாமலை ஜன்னத் நகரை சேர்ந்த அப்துல்நிசார் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் தர்வீஸ் . இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த அப்துல்நிசாரின் தந்தை அப்துல்காதர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்வீஸ் மற்றும் அவரது நண்பரான பல்லவன்நகரை சேர்ந்த தனசேகர்சூர்யா உறவினரான ஜன்னத்நகரை சேர்ந்த முபாரக் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் தர்வீஸ் உள்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

வந்தவாசி அருகே பஸ் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆவணவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லன் . இவர், மாம்பட்டு கிராமம் அருகே உள்ள தனியார் நர்சரி தோட்டத்தில் வேலை செய்து வந்தார். காலை வேலையை முடித்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டை நோக்கிச் சென்ற அரசு பஸ் திடீரென அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்லன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 May 2023 10:20 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
  2. புதுக்கோட்டை
    டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
  3. கந்தர்வக்கோட்டை
    பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
  4. லைஃப்ஸ்டைல்
    Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
  5. புதுக்கோட்டை
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
  6. கடையநல்லூர்
    உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
  7. லைஃப்ஸ்டைல்
    Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
  8. தர்மபுரி
    காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
  9. ஓசூர்
    வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...