அருணாச்சலேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின் சாமி தரிசனம் செய்து பின்னர் பக்தர்களுக்கு அவர் நீர் மோர் வழங்கினார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அண்ணாமலையார் மீது அதிக பக்தி கொண்டவர், திருவண்ணாமலைக்கு வரும்போது எல்லாம் அண்ணாமலையார் கோவிலுக்கு செல்வது வழக்கம் .
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை ஆரணி ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்தார். அவருடன் திருவண்ணாமலைக்கு துர்கா ஸ்டாலினும் வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று மாலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை வணங்கி வழிபட்டார். முன்னதாக சம்பந்த விநாயகர் சன்னதி, நவகிரக சன்னதி, கால பைரவர் உள்ளிட்ட சந்ததிகளை வணங்கி வழிபட்டார்.
பின்னர் கோயிலில் பக்தர்களுக்கு துர்கா ஸ்டாலின் நீர் மோர் வழங்கினார்.
முன்னதாக திருக்கோயில் சிவாச்சாரியார்கள், கோயில் அலுவலர்கள் துர்கா ஸ்டாலினுக்கு கோயில் சார்பாக பிரசாதங்களை வழங்கினார்கள்.