ஆடம்பரத்திற்காக லஞ்சம் வாங்காதீர்கள்; ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி அறிவுரை

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன்.
மனைவி மகன் மகள் ஆகியோரின் ஆடம்பரத்திற்காக லஞ்சம் வாங்காதீர்கள். பேராசை வந்து விட்டாள் நஷ்டத்தில் தான் முடியும் என திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகுழு சார்பில் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் தாசில்தார் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிக்குழு மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் வேலு, உதவி காவல் ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகிக்க தலைமையிடத்து துணை தாசில்தார் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு ஊழல் தடுப்பு பிரிவு துணைகாவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் பேசுகையில்,
வாழ்க்கை புரியாத காரணத்தால் லிப்ட் கொடுத்துவிடுகிறோம். யாரும் லிப்ட் கேட்டாலும் லிப்ட் கொடுக்காதீர்கள். வாழ்க்கை பயணத்தில் யாருக்கும்லிப்ட் கொடுக்காதீர்கள். உங்களது பேச்சுக்கு எதிராக மனைவியோ மகனோ இருந்தாலும் நீங்கள் அதற்கேற்றாற்போல் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அரசு ஊழியர்கள் தங்களது பொறுப்பு கடைமைகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும். தன்னை நாடிவரும் ஏழை எளியோருக்கு உதவி செய்திட வேண்டும். தேவை இன்றி பொதுமக்களை அலைய விடக்கூடாது
லஞ்சம் வாங்கலாமா வாங்ககூடாதா என பொண்டாட்டி பேச்சைக்கூட கேட்ககூடாது. சின்னசின்ன ஆசை இருக்கலாம். ஆனால் பேராசையாக இருக்கக்கூடாது, மனைவி மகன் மகள் ஆகியோரின் ஆடம்பரத்திற்காக லஞ்சம் வாங்காதீர்கள் பேராசை வந்து விட்டாள் நஷ்டத்தில் தான் முடியும், லஞ்சம் ஒழிந்தால்தான் இந்தியா வல்லரசாக மாறும் என்றார்.
இந்த விழிப்புணர்வு முகாமில் மண்டல துணை தாசில்தார்கள் மஞ்சுநாதன், ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் சுதா கஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் காமேஷ்குமார், ஏழுமலை மற்றும் மண்டல துணை தாசில்தார்கள், நில அளவர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu