பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய சோனியா காந்தி அவர்கள் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
ai marketing future