திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்..!

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டபேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் முன்னி லையில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிளியாப்பட்டு ஊராட்சியில் கிளியாப்பட்டு, களஸ்தம்பாடி, சானானந்தல், வள்ளிவாகை, குன்னியந்தல் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் ராஜா ராணி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இம்முகாமில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் மூன்று ஆண்டு கால ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி முதற்கட்டமாக நகராட்சிகளில் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு பல்வேறு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதால், கிராமப்புற மக்களின் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று, இத்திட்டத்தினை கிராமப்புறங்களில் தொடங்கி வைத்தார்கள். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இம்முகாம்களில் பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டு, அவர்களுக்கு உரிய பதிலளிக்க துறை சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மனுக்களை அளித்து ஒப்புகை பெற்றுக்கொண்டால் ஒரு மாதத்திற்குள் அதற்கான தீர்வை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக அந்த துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை செய்து தருவார்கள், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இம்முகாமில் பங்குபெற்று மனுக்களை அளித்து பிரச்சனைகளை தீர்த்து கொள்ள பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று தமிழ்நாடு சட்ட ப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி தெரிவித்தார்.

இச்சிறப்பு திட்ட முகாமில் மகளிர் திட்டம் சார்பாக கிளியாப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பாசமலர் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 1 இலட்சத்து 50 ஆயிரம் கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும், மகிழ்ச்சி மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 1 இலட்சம் கடனுதவி பெறுவதற்கான ஆ ணையினையும் , களஸ்தாம்பாடி ஊராட்சியில் உள்ள ஆப்பிள் மற்றும் தங்கம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் வருவாய்த்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மற்றும் 1 பயனாளிக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் வழங்கினார்கள்.

இம்முகாமில் துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழுத்தலைவர் தமயேந்தி ஏழுமலை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Tags

Next Story