திருவண்ணாமலையில் வேலை நிறுத்தத்தால் பேருந்து சேவை பாதிப்பு: பொதுமக்கள் அவதி

காட்சிபடம்
மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி, தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. ஐஎன்டியுசி , சிஐடியு, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதில் தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் அரசு பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மண்டலத்தில் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆரணி பணிமனையில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் 20% மட்டுமே இயக்கப்பட்டுள்ளது, செய்யாறு மண்டலத்திலிருந்து 30 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன .
வந்தவாசியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று காலை 11 மணி வரையில் இயக்கப்பட வேண்டிய 82 பேருந்துகளில் 12 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு உள்ளன மற்ற பேருந்துகள் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது
இதனால் பணிக்கு செல்பவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்கள், குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால், வெளியூர் செல்வோர், கல்லூரிகளுக்கு செல்வோர் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். தனியார் பேருந்துகளில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகின்றது, பேருந்து கட்டணம் அதிகமாக வாங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால், ஷேர் ஆட்டோ, ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவற்றில், அதிக எண்ணிக்கையில் பயணிக்கும் சூழலை பார்க்க முடிகிறது. பல ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டணங்களை இரட்டிப்பாக்கி விட்டதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பிளஸ் 2 இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது, இதனால் பேருந்தில் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu