/* */

அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
X

கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்டத் துணைச் செயலாளர் அரங்கநாதன், மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன், பேரவை செயலாளர்கள், ஆறுமுகம், பழனி, நகர செயலாளர் செல்வம்,ஒன்றிய செயலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள், உள்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

செய்யாறு

செய்யாற்றில் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், செய்யாறு நகர செயலாளர் வெங்கடேசன் , அவை தலைவர் ஜனார்த்தனன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், குணசீலன், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போளூர்

போளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் போளூர் தொகுதி எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆரணி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

இதில் மாவட்ட செயலாளர் ஜெயசுதா, ஒன்றிய செயலாளர் ராகவன், ஊராட்சி மன்ற தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ,அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செங்கம்

செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மகரிஷி மனோகரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக போளூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார்.

இதில் தலைமை கழக பேச்சாளர் அமுதா அருணாச்சலம், மாவட்ட அவை தலைவர் நாராயணன், ஒன்றிய செயலாளர் அசோக், செங்கம் கிழக்கு தொகுதி செயலாளர் ராஜா ,இளைஞர் பாசறை, ஒன்றிய செயலாளர் ,அணி தலைவர்கள் ,பேரூராட்சி தலைவர்கள், நகர செயலாளர், அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 March 2024 2:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு