விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை - திருவண்ணாமலை எஸ்.பி., எச்சரிக்கை

விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., பவன்குமார் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., பவன்குமார் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாய நிலங்களில் எலி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக விவசாயிகள் சிலர் தங்களின் விளைநிலைங்களை சுற்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கின்றனர். இதன் மூலம் சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் வன உயிரினங்கள் மின்வேலியில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.
இதனை தடுக்கும் வகையில் இனிவரும் காலங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் விளைநிலங்களில் யாரேனும் மின்வேலி அமைப்பது தெரியவந்தால், அந்த நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu