போளூா் அருகே 3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயம் அழிப்பு

கள்ளச்சாராயத்தை கண்டறிந்து அழித்த போலீசார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே மிளகாய்நாஸ் ஓடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயத்தை போலீஸாா் கண்டறிந்து அழித்தனர்.
மாவட்ட காவல் கண்கணிப்பாளா் காா்த்திகேயன் உத்தவின்படி, மதுவிலக்க அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ்ராஜ் ஆலோசனையின் பேரில், போளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் கே.புனிதா தலைமையில் போலீஸாா் மிளகாய்நாஸ் ஓடையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, முள்புதரில் இருந்த 3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயத்தை கண்டறிந்து அதை கீழே கொட்டி அழித்தனர்.
மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் பாகாயத் தோட்ட தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 56), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி 8 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய, வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி வாதாடினார். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.
அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குணசேகரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu