/* */

100% வாக்குப்பதிவு - நகராட்சி ஊழியர்கள் சைக்கிள் பேரணி

100%  வாக்குப்பதிவு - நகராட்சி ஊழியர்கள் சைக்கிள் பேரணி
X

வந்தவாசியில் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நகராட்சி சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை நகராட்சி பொறியாளர் உஷாராணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதை தொடர்ந்து நடைபெற்ற சைக்கிள் பேரணியில் அனைவரும் கட்டாயம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி ஊழியர்கள் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.இந்த சைக்கிள் பேரணி வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி பழைய பஸ்ஸ்டாண்ட் பஜார் சாலை தேரடி பகுதி, காந்தி சாலை, காஞ்சிபுரம் சாலை வழியாகச் சென்று முடிவடைந்தது.

Updated On: 10 March 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...