கீழ் பென்னாத்தூர், தேசூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

கீழ் பென்னாத்தூர், தேசூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்
X

கீழ்பெண்ணாத்தூரில்  மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர், தேசூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெற்றது

கீழ்பென்னாத்தூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பணி மேற்பார்வையாளர் அன்பரசி, இளநிலை உதவியாளர் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய அட்டை வழங்க வேண்டும். மாட்டு கொட்டகை, ஆட்டு கொட்டகை போன்றவற்றை அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கையில், இந்த மாதம் இன்னும் குறைவான நாட்களே இருப்பதால் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் வேலை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து கோரிக்கைகள் குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்றார்.

தேசூர்

தேசூர் பேரூராட்சியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் கூட்டத்தில் யானைக்கால் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தேசூர் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தெள்ளார் வட்டார மருத்துவர் ஹித்தேன் திஷா, தேசூர் ஆரம்ப சுகாதார நிலைய, டாக்டர் ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் யானைக்கால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்தார். யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு அன்ன கூடை, துண்டு, சோப்பு உள்பட உபகரணங்கள் வழங்கப்பட்டு மேலும் யானைக்கால் நோயில் பாதிக்காமல் இருப்பதற்கு உண்டான மருந்து வழங்கப்பட்டது. இதில் செவிலியர்கள் ரேணுகா, சீதாசெல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!