/* */

முக்கிய கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படாததால் இன்றும் வேட்பு மனுதாக்கல் இல்லை

திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய கட்சி வேட்பாளர் பற்றிய அறிவிப்பு இல்லாததால் இன்றும் வேட்பு மனுதாக்கல் இல்லை

HIGHLIGHTS

முக்கிய கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படாததால் இன்றும் வேட்பு மனுதாக்கல் இல்லை
X

நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்டவைகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்.19-ந்தேதி நடைபெறுகிறது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆரணி நகர மன்றத் தேர்தலில் 11 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்

பிரதான கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை அந்தந்த மாவட்ட அளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நாளை மறுதினம் அமாவாசை தினம் என்பதாலும் கடந்த இரண்டு நாட்களாக ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை.

இது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறுகையில், போதிய கால அவகாசம் இல்லாததால் மனுதாக்கல் உடன் அளிக்க வேண்டிய ஆவணங்களை சேகரித்து, சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் கால அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்தனர்.

நாளை விடுமுறை தினம் என்பதால் நாளை மறுதினம் உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 29 Jan 2022 1:59 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
  9. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு