/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலையில் வருகிற 12-ந் தேதி நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 24 ஆயிரம் தடுப்பூசி போட இலக்கு

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்
X

கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி அறிவுறுத்தி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக முக கவசத்துடன் வாழ்ந்து வருகிறோம். அதனை தவிர்க்க கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 62 ஆயிரத்து 896 ஆகும். நேற்று வரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 261 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 257 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

வருகிற 12-ந் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்று 1 லட்சத்து 24 ஆயிரம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 82 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை. எனவே 12-ந் தேதியன்று மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சி, 10 பேரூராட்சி, 4 நகராட்சி ஆகியவற்றில் 973 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும். 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஒரு முகாமிற்கு 3 நபர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கூட்டுறவுத்துறை அலுவலர்களும் உடன் இருந்து பணியாற்றுவார்கள். இதன் ஒரே நோக்கம் தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். மேலும் 12-ந் தேதியன்று டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே விற்பனை நடைபெறும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட வன அலுவலர் அருண்லால் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Sep 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!