/* */

கீழ்பெண்ணாத்தூர் அருகே 38 மாடுகள், 11 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு

திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய 38 மாடுகள், 11 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூர் அருகே 38 மாடுகள், 11 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு
X

வெள்ளத்தில் சிக்கிய மாடுகளை மீட்கும் தீயணைப்புத்துறையினர்.

திருவண்ணாமலை மவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், அரும்பாக்கம் கிராமத்தில் துரிஞ்சலாறு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் 38 மாடுகளுடன் 11 பேர் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து, வேட்டவலம் தீ அணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் சுமார் காலை 8.30 மணியளவில் 5 ஆண்கள், 3 பெண்கள், 3 குழந்தைகள், 36 மாடுகளையும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட மாடுகள் மேடான பகுதியில் விடப்பட்டுள்ளன. 4 மாடுகள் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்டவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மீட்பு நடவடிக்கையில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சட்டப் பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.

Updated On: 19 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  7. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?