/* */

கலசப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்

கலசப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கலசப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்
X

மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலசப்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50 மாற்று திறனாளிகள் தங்களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்க வேண்டும் எனவும், அரசு சார்பில் வழங்கப்படும் பசுமை வீடு வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் மற்றும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அன்பரசி ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரித்திங்கராஜ் ஆகியோர் நேரில் சென்று மாற்றுத் தினாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட மாற்று திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 22 March 2022 6:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்