கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு ஆணை வழங்கிய எம்எல்ஏ!

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு ஆணை வழங்கிய எம்எல்ஏ!

பயனாளிகளுக்கு அரசு ஆணையை வழங்கிய சரவணன் எம்எல்ஏ

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு ஆணைகளை எம்எல்ஏ வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 70 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணையையும் 50 பயனாளிகளுக்கு வீடு பழுது பார்க்கும் ஆணையையும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு அரசு ஆணையை வழங்கி பேசியதாவது,

அரசு வழங்கும் வீட்டிற்கு யாராவது லஞ்சம் கேட்டாலோ அல்லது அரசாணை வாங்கித் தருகிறேன் என்று பணம் கேட்டாலோ யாரும் கொடுக்காதீர்கள் தமிழக அரசு தமிழக மக்களுக்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கீழ் குடிசை இல்லா கிராமங்களாக மாற்றுவதற்காக இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்து அதன் மூலம் அரசாணையை வழங்கி மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதால் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும்.

அதேபோல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் லஞ்சம் கேட்டு கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு பணியின் தொகையை வழங்க மாட்டோம் என்று யாராவது கூறினால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதை கண்டு நீங்க யாரும் அச்சப்படாமல் லஞ்சம் யாராவது கேட்டால் உடனடியாக என்னிடமும் ஒன்றிய குழு தலைவரிடமும் தகவல் கூறுங்கள். அப்படி கூறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த வீடு கட்டும் பணியை 3 மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், குடிசை இல்லா கிராமமாக மாற்ற வேண்டும், வரும் தைப்பொங்கல் நேரத்தில் வீடு கட்டும் பணி களை முடித்து கலைஞரின் கனவு இல்லத்தில் பொங்கல் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்றார்.

மேலும் இந்த வீடு கட்டும் பொழுது உங்களுக்கு தேவையான சிமெண்ட், கம்பி போன்ற தரமான பொருட்களை உங்களுக்காக தமிழக அரசு வழங்கப்படுகிறது. அதன் தொகையை பில்லில் கழித்துக் கொண்டு மீதி தொகையை வழங்கப்படும். அதேபோல் உங்களுக்கு பணியின் தொகையை பெறுவதற்கு நாங்கள் முழு உதவி செய்கிறோம் என்று கூறி 70 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டும் அரசு ஆணையையும் 50 பயனளிகளுக்கு வீடு பழுதுபார்க்கும் ஆணையை சரவணன் எம்எல்ஏ வழங்கி கூறினர்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story