/* */

பொதுமக்கள் போராட்டம் எதிரொலி: பாலம் அமைக்கும் பணி தீவிரம்

வெள்ளப் பெருக்கில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து பாலம் அமைக்கும் பணி தீவிரம்

HIGHLIGHTS

பொதுமக்கள் போராட்டம் எதிரொலி: பாலம் அமைக்கும் பணி தீவிரம்
X

நல்லான் பிள்ளை பெற்றான் பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கியது

கலசப்பாக்கம் அருகே தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் சேதம் அடைந்தது . இதனால் தற்காலிக பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கலசப்பாக்கம் பகுதியில் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணை பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து நல்லான்பிள்ளை பெற்றாள் பகுதியிலுள்ள தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடியாக தற்காலிக பாலம் அமைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் தற்காலிக பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வந்தது.

தொடர் மழை காரணமாகவும், தரச்சான்று பெற்ற பின்பு தற்காலிக பாலம் தொடங்குவதற்கு முடிவு செய்தாலும் பாலம் வேலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாலம் அமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல்லறிந்த கலசபாக்கம் ஒன்றிய குழுத்தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், கடலாடி காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு இரும்புத் தூண்கள் பொருத்தப்பட்டு தற்காலிக பாலம் அமைக்கும் பணி தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 23 Nov 2021 6:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்