/* */

ஜமுனா மரத்தூரில் தலித் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் தலித் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

HIGHLIGHTS

ஜமுனா மரத்தூரில் தலித் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
X

தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் ச.கருப்பையா ,  மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் 80க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.

அந்தப் பகுதி மக்களுக்கு வீடு, மயானம் போன்ற எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காததால் கடும் சிரமத்தில் வசித்து வந்தார்கள்.

அவர்களுக்கு உடனடியாக வீடு வழங்கக் கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமையில் தலித் மக்கள் வசிக்கும் மலைப்பகுதிக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் கிச்சா, மாநில மகளிர் அணி செயலாளர் தலித் நதியா, மேற்குமாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் சிவகுமார், போளூர் ஒன்றிய செயலாளர் மார்க் பந்து, ஒன்றிய மகளிரணி செயலாளர் கீதா ஆகியோர் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் அங்கு வசித்து வரும் தலித் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுப்பதாக உறுதியளித்தனர்.

Updated On: 22 April 2022 2:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்