புதுப்பாளையம் ஒன்றியத்தில் திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்

ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெற்ற வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் புதுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்ற திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள், செயல்படுத்த வேண்டிய அடிப்படை தேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
37 ஊராட்சி செயலா்களிடம் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகள், முழுமை பெறாத பணிகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், சம்பந்தப்பட்ட பணி மேற்பாா்வையாளா், பொறியாளா்களிடமும் கேட்டறிந்தாா்.
மேலும் வீடு வழங்கும் திட்டம், ஊராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட மின் மோட்டார்கள், பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகள் குறித்து குறித்து அதிகாரிகளிடமும், ஊராட்சி செயலாளர்களிடமும் கலெக்டர் கேள்விகளை எழுப்பினார். பணிகளை முழுமையாகவும், தரமாகவும் செய்து முடிக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 37 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபு, நிா்மலா, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் பணிமேற்பாா்வையாளா்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள், வருவாய் துறை அதிகாரிகள் , ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu