கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய சமையலறை கட்டிடங்கள் திறப்பு

சமையலறை கட்டிடங்களை திறந்து வைத்த எம் எல் ஏ சரவணன்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் யூனியனில் 9 புதிய சமையலறை கட்டிடங்கள் ரூ. 57 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சேர்மன் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார் . மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், துணை சேர்மன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சமையலறை கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் ,
கலசப்பாக்கம் யூனியனில் உள்ள கடலாடி, வீரலூர், கிடாம்பாளையம், காந்தி நகர் ஆகிய ஊராட்சிகளில் புதிய சமையலறை கட்டிடங்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 56.9 லட்சத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டு இப்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஊராட்சிகளிலும் சமையலறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த சமையலறை கட்டிடத்தின் மூலம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி சமைத்து மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்களின் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு ம உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் பெண்களுக்கு பல திட்டங்களை வழங்கி வருகிறார் ,பெண்கள் பேருந்தில் இலவச பயணம், குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று வழங்கப்பட உள்ளது.
கலசப்பாக்கம் யூனியனின் பல வளர்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளி கட்டிடம், சாலை அமைத்தல், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் ,பக்க கால்வாய் அமைத்தல், மேம்பாலம் அமைத்தல் உண்டான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
கலசப்பாக்கம் தொகுதி மக்களுக்காக தமிழக அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் பாராமல் மக்கள் பணியை தீவிரமாக செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் எண்ணற்ற திட்டங்கள் செய்வதற்கு என்றென்றும் தயாராக உள்ளேன் என்று எம்எல்ஏ சரவணன் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட விநியோக அலுவலர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர்கள் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu