புதுப்பாளையம் ஒன்றியத்தில்புதிய மின் மாற்றி தொடங்கி வைத்த எம்எல்ஏ

புதுப்பாளையம் ஒன்றியத்தில்புதிய மின் மாற்றி தொடங்கி வைத்த எம்எல்ஏ
X

புதிய மின் மின்மாற்றியை  சரவணன் எம்எல்ஏ  தொடங்கி வைத்தார்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் புதிய மின் மாற்றி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் 5 இடத்தில் 287 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றியை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு, பெரியேரி, அடிவாரம், முன்னூர்மங்களம், புதூர் செங்கம், ஆகிய 5 ஊராட்சிகளில் 287 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றியை தி.சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி லட்சுமணன், அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , கலந்துகொண்டு புதிய மின்மாற்றியை தொடங்கிவைத்து பேசியதாவது;

காரப்பட்டு, பெரியேரி, அடிவாரம், முன்னூர்மங்கலம், புதூர் செங்கம், ஆகிய ஐந்து ஊராட்சி மக்கள் நான் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது என்னிடம் எங்கள் பகுதியில் சரியான முறையில் மின் வசதி கிடைக்காததால் எங்களுக்கு புதிய மின் மற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுயிடமும், மின்சார துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்து உடனடியாக புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி வந்தேன். அதன் அடிப்படையில் 287 கிலோ வாட் கொண்ட புதிய ஐந்து மின்மாற்றியை கொடுத்து இப்பொழுது அந்த மின் மற்றி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு மின்சாரம் துண்டிக்காமல்,மின்னழுத்தம் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் சரியான முறையில் வழங்கப்படும். இதேபோல் இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாமல் வழங்கப்படும் என்று சரவணன் எம்எல்ஏ என கூறினார்.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சங்கரகாரன், உதவி செயற்பொறியளர் மூர்த்தி, உதவி பொறியாளர்கள் சுரேஷ், சிவசங்கர், மாவட்ட பிரதிநிதி சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மின்சார துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future