/* */

திருவண்ணாமலை: கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்த, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் கோவிலாணூர் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் (வயது 22) மற்றும் கீழ்அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க ஒருவரை ஜமுனாமரத்தூர் போலீசார் கைது செய்தனர். அதேபோல் ஜமுனாமரத்தூரில் கஞ்சா பயிரிட்டு அறுவடை செய்து விற்பனை செய்து வந்த ஜமுனாமரத்தூரை அடுத்த திமிரிமரத்தூர் பகுதியை சேர்ந்த நடராஜன் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கண்ட 3 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 23 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  6. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  8. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  9. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  10. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...