/* */

பீமன் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது

HIGHLIGHTS

பீமன் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
X

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அருவி அருகே செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கபட்டிருப்பதாக வன அலுவலர் கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களாக போளூரில் அதிக அளவு மழை பதிவாகி வருகிறது . கடந்த சில நாட்களாக ஜவ்வாது மலையில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜவ்வாது மலையில் பல்வேறு காட்டாறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததன் காரணமாக காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தடுப்பு கம்பிகளை தாண்டி வெள்ளம் வருவதால் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வரும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து வன அலுவலர் குணசேகரன் கூறுகையில் பீமன் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அருவி பகுதியில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Updated On: 28 Sep 2021 1:13 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...