/* */

வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கலசபாக்கத்தில் வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

விவசாயிகள் குறைதீர்வு நாள்  கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் லட்சுமிநரசிம்மன் தலைமை தாங்கினார். பிடிஓ வேலு, தாசில்தார் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். கலசப்பாக்கம் தாலுகாவை ஆரணி கோட்டத்தில் இருந்து பிரித்து திருவண்ணாமலை கோட்டத்திற்கு மாற்ற வேண்டும். யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும். ஆதமங்கலம் கிராமத்தில் உடனடியாக கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும்.

பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் அளித்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி பட்டா மாற்ற உத்தரவுகளை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி பேசினர். முடிவில் சமூக பாதுகாப்பு தாசில்தார் மலர்கொடி நன்றி கூறினார். விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் திடீரென வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு யூரியா அதிக விலைக்கு விற்பதையும், தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியும், கலசபாக்கம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கதிரேசன், வெங்கடேசன், சிவலிங்கம், நடராஜன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 March 2022 5:58 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!