ஜமுனா மரத்தூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
![ஜமுனா மரத்தூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு ஜமுனா மரத்தூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு](https://www.nativenews.in/h-upload/2022/08/19/1578958-2995869544383823216661674936701443897078953n.webp)
நீர்வீழ்ச்சி பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.
District Collector in Tamil -திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் ஆய்வு செய்தார். நீர் வரும் பாதைகள் ஆய்வு செய்த ஆட்சியர் தடுப்பிற்கு போடப்பட்டுள்ள இரும்பு வேலியின் தரத்தினை ஆய்வு செய்தார்.
பின்னர் அரசு மாதிரி பள்ளி மாணவர் விடுதியில் ஆய்வு செய்த ஆட்சியர் , வருகை பதிவேட்டினை ஆய்வு செய்து மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தும், அங்கு தங்கியுள்ள மாணவியர்களிடம் உரையாடி அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் அறையினை ஆட்சியர் திறந்து வைத்தார். ஜவ்வாது மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்கம் லிமிட் மூலமாக பயனாளிகளுக்கு கடன் உதவிக்கான காசோலியினை வழங்கினார்.
ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் அருண் லால், செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், ஜமுனாமரத்தூர் ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி, வனத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஜெயம், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu