கலசப்பாக்கம் அருகே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி: எம்பி, எம்எல்ஏ ஆய்வு

கலசப்பாக்கம் அருகே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி: எம்பி, எம்எல்ஏ ஆய்வு

உயர்மட்ட பால பணியினை ஆய்வு செய்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை

கலசப்பாக்கம் அருகே கிராமங்களை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை எம்பி மற்றும் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டனர்.

கலசபாக்கம் அடுத்த பூண்டி முதல் பழங்கோவில் கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ 19.92 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்தனர்.

அப்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பேசுகையில், செய்யாற்றின் குறுக்கே மூன்று உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு ரூ 55.88 கோடி மதிப்பீட்டில் பாலங்கள் அமைக்கப்பட்டு அதன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் பூண்டி முதல் பழங்கோவில் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மேலும் அதன் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அதேபோல் இந்த செய்யாற்றின் குறுக்கே கலசபாக்கம் தொகுதியில் மட்டும் ஐந்து உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் இந்த பூண்டி முதல் பழங்கோவில் கிராமங்களை இணைக்கும் வகையில் ஒரு உயர்மட்ட பாலமும் ஒன்று இந்த உயர் மட்ட பாலத்தின் மூலம் இப்பகுதி மக்கள் இக்கரையில் இருந்து அக்கறைசெல்வதற்கு சுலபமான வழியாக இருக்கும் , மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

மேலும், கலசப்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினராக சரவணன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு வளர்ச்சி பணிகளும் பல்வேறு உயர்மட்ட பாலங்களும் பல நலத்திட்ட உதவிகளும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வழங்கும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் இல்லம் தேடி சென்றடைகிறது. தமிழக மக்களுக்காக வழங்கப்படும் திட்டங்கள் அனைத்தும் கலசபாக்கம் தொகுதிக்கு உடனுக்குடன் சென்று அடைகிறது. மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதுதான் திராவிட மாடல் அரசு என்று அண்ணாதுரை எம்பி , கூறினார்.

ஆய்வின்போது சரவணன் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், வழக்கறிஞர் சுப்பிரமணியம், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story