ஜவ்வாது மலை ஊராட்சியில் முறைகேடு புகார்: மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் ஊராட்சி மன்ற கூட்டங்கள் எதுவும் நடத்தாமலும், தீர்மானங்கள் இயற்றாமலும், வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாமலும் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் பதிக்க அந்த வீட்டின் உரிமையாளரே பள்ளம் தோண்ட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மேலும் பதிக்கப்பட்ட குழாய்கள் தரம் குறைந்தவை. ஊராட்சிமன்ற தலைவர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தனர். தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu