சிறுவர்களை கொத்தடிமையாக வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

சிறுவர்களை கொத்தடிமையாக வைத்திருந்த வாத்து பண்ணை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சிறுவர்களை கொத்தடிமையாக வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு
X

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தை சேர்ந்த 17 மற்றும் 10 வயதுடைய 2 சிறுவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ள வாத்து பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

வாத்து பண்ணையின் உரிமையாளர்கள், சிறுவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பி திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து வாத்து பண்ணையை சேர்ந்த சிலர் தேடி வந்து பேருந்து நிலையத்தில் வைத்து மீண்டும் அவர்களை அடித்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் அவர்களிடமிருந்து சிறுவர்களை மீட்டு திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள அரசு வரவேற்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சித்ராபிரியா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முன் பணம் கொடுத்து, அவர்களை கொத்தடிமையாக வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வாத்து பண்ணையின் உரிமையாளர்கள் காவேரிபட்டினத்தை சேர்ந்த முருகேசன், சிவா ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 6:51 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    Governments Spying on Apple & Google Users-ஆப்பிள்,கூகுள் தரவுகள்...
  2. தமிழ்நாடு
    கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
  3. இந்தியா
    Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
  4. தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
  5. தமிழ்நாடு
    தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
  6. இந்தியா
    Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
  7. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  8. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  9. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
  10. சிவகாசி
    சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!