/* */

கலசப்பாக்கத்தில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா

கலசப்பாக்கத்தில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கலசப்பாக்கத்தில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா
X

எருது விடும் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

அதில் எருதுகளுக்கு வண்ண வண்ண துணிகள் கட்டியும், பலூன்கள், கலர் பவுடர்கள், வர்ணங்கள் பூசி அலங்காரம் செய்து சிறப்பான முறையில் எருது விடும் விழா நடைபெற்றது.

இந்த எருது விடும் திருவிழா கலசப்பாக்கம் பகுதியில் ஆதமங்கலம் புதூர், மேல் சோழங்குப்பம், பாலூர், கடலாடி ,வீரலூர் ,கிடாம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு எருது விடும் விழா நடைபெறும்.

இந்த விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களிப்பதற்காக ஆர்வமாக வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் கலசப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த எருது விடும் விழாவில் கலந்து கொள்வர்.

அதே போல் பக்கத்து தாலுகாக்களில் இருந்தும் எருதுகளைக் கொண்டு வந்து இந்த கலசப்பாக்கம் தாலுகாவில் சிறப்பான முறையில் எருதுகளை விடுவார்கள். பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாவட்ட காவல் துறை மூலம் அதிகபட்சமாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல் எருது விடும் விழாவில் மக்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னேற்பாடாக மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

300 க்கும் மேற்பட்ட விருதுகள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது. இந்த திருவிழாவை கண்டுகளிப்பதற்கு 4000 க்கும் அதிகமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

Updated On: 15 Jan 2024 11:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  2. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  3. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  4. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  5. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  6. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி
  8. வீடியோ
    அரசுக்கு சாராயத்தை தவிர வேற என்ன வருமானம் இருக்கு !#seeman...
  9. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  10. சூலூர்
    கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது