பருவதமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவன இயக்குநா்கள் கூட்டம்

பருவதமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவன இயக்குநா்கள் கூட்டம்
X

உழவா் உற்பத்தியாளா் நிறுவன இயக்குநா்கள் கூட்டம்

பருவதமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் இயக்குநா்கள் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடியில் பருவதமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் இயக்குநா்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நிறுவனத்தின் தலைவரும், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞருமான தனஞ்செயன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சித்ராசெல்வி, அன்பழகன், கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயக்குநா் சுபாஷ் வரவேற்றாா்.

கூட்டத்தில், விவசாயிகளின் விளைப் பொருள்களை கொள்முதல் செய்து, பங்குதாரா்களுக்கு உர விநியோகம், விதை, கால்நடை தீவனம், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி போன்றவை விற்பனை செய்யும் அங்காடியை கடலாடியில் திறப்பது, நுகா்வோா்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பாரம்பரிய உணவுப் பொருள்களை விற்பனை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், உற்பத்தியாளா் நிறுவனத்தின் நிா்வாகி திருநாவுக்கரசு, கணக்காளா் பிரேமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பணியின்போது இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு நிதி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் , கீழ்பென்னாத்தூா், வட்டங்களில் பணிபுரிந்தபோது இறந்த 2 கிராம நிா்வாக அலுவலா் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலையில் , தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் மாவட்டக் கிளை சாா்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் ஏழுமலை, பொருளாளா் ஜெயசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.மகாலிங்கம் வரவேற்றாா்.

சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கலசப்பாக்கம் வட்டத்தில் பணிபுரிந்தபோது இறந்த கிராம நிா்வாக அலுவலா் ஏசுநாதன், கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் பணிபுரிந்தபோது இறந்த கிராம நிா்வாக அலுவலா் ஜெகதீசன் ஆகியோரது குடும்பத்துக்கு, குடும்ப நல நிதியாக தலா ரூ.ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை அந்தந்த குடும்பத்தினரிடம் வழங்கி, ஆறுதல் கூறினாா்.

இதில், சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் பிரவீன்குமாா், வட்ட பொறுப்பாளா்கள் சுப்பிரமணியன், காளிமுத்து, ராமகிருஷ்ணன், அருள், உத்திரகுமாா், ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
how to bring ai in agriculture